காவிரி - அய்யாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிபடி மாணவர்களுக்கான கல்விக்கடனை ரத்து செய்யாததை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 30-க்கும் மேற்பட்டோர் காவிரி ஆற்றில் இறங்கி கழுத்தளவு மணலில் புதைத்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அருகே காவிரி ஆற்றுக்குள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தளவு புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தின்போது, விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். 60 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். காவிரி ஆற்றின் உபரி நீரை ஐயாற்றில் திருப்பி விட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 30-க்கும் மேற்பட்டோர் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சியில் பரபரப்பு நிலவியது.
பின்னர், மாநகர காவல்துறையினர் தலையிட்டு சமாதானமாக பேசி காவிரி ஆற்றில் இருந்து விவசாயிகளை வெளியேற்றினர்.
செய்தி: க.சண்முகவடிவேல்