Advertisment

ராசி மணல் அணைக் கட்டும் இடத்தில் விவசாயிகள் ஆய்வு

தமிழக காவிரி டெல்டா விவசாய சங்க தலைவர் பி. ஆர். பாண்டியன் தலைமையில் ராசி மணலில் அணை கட்டுவது கர்நாடகா தமிழ்நாடு மாநிலங்கள் பயன்பெறும் என்பது குறித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு, கர்நாடக மாநில விவசாய சங்க தலைவர் சாந்தகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

author-image
WebDesk
New Update
Rasimanal

ராசி மணல் அணைக் கட்டும் இடத்தில் விவசாயிகள் ஆய்வு

தமிழக காவிரி டெல்டா விவசாய சங்க தலைவர் பி. ஆர். பாண்டியன் தலைமையில் ராசி மணலில் அணை கட்டுவதற்கு கர்நாடகா தமிழ்நாடு மாநிலங்கள் பயன்பெறும் என்பது குறித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு, கர்நாடக மாநில விவசாய சங்க தலைவர் சாந்தகுமார் இரு மாநில விவசாய சங்க தலைவர்கள் 15 பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் 27-ஆம் தேதி தஞ்சாவூரில் கலந்துரையாடல் நடத்தி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். 
இன்று காலை ஒகேனக்கலில் இருந்து புறப்பட்டு ராசி மணல் அணைக்கட்டும் இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Advertisment

அப்பொழுது தேன்கனிக்கோட்டை சாலையிலிருந்து பிலிகுண்டுலு வரை புதிய சாலை அமைப்பதற்கு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு இருந்தது. இதனால் விவசாயிகள் வந்த வாகனங்கள் பாதையில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனால் கோபமடைந்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு திடீரென ஓசூர் தேன்கட்டை சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். விவசாயிகளை பார்த்தால் பிச்சைக்காரர்கள் மாதிரி தெரிகிறதா? வயித்துக்கு சோறு தானே சாப்பிடுற கொலைகார பாவிகளா என்று ஒப்பந்ததாரரிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும், விவசாயிகள் வனப்பகுதிக்குள் செல்லும்போது ஜல்லி கற்கள் கொட்டுவதைக் கண்டு காவல் துறையினரிடம் விவசாயிகள் வெளியில் வரும் வரை ஜல்லி கற்களை பரப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் ஒப்பந்ததாரர் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஜல்லி கற்களை பரப்பியதால் வாகனங்கள் வருவதற்கு சிரமங்கள் ஏற்பட்டது. இதனை அடுத்து ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதத்தில் விவசாய சங்க தலைவர்கள் ஈடுபட்டனர். 

விவசாயிகள் உள்ளே சென்றதை அறிந்தே வேண்டுமென்றே ஜல்லி கற்களை கொட்டி உள்ளனர் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தேன்கனிக்கோட்டை - ஓசூர் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. .

இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசியின் வாயிலாக பேசிய அய்யாக்கண்ணு வேண்டுமென்றே விவசாயிகளை பழிவாங்கும் நோக்கத்தில் ஒப்பந்ததாரர்கள் செயல்படுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பணிகள் தரம் இல்லாத இருப்பதினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விவசாய சங்க தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். 
ராசி மணல் பகுதியில் ஆய்வுக்கு ஆற்று பகுதிக்கு விவசாயிகள் சென்ற பிறகு திரும்பி வருவதற்குள் சாலையில் ஜல்லி கற்கள் கொட்டியதால் கோபமடைந்த விவசாய சங்க தலைவர்கள் ஒப்பந்ததாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சாலை மறியல் செய்ததால் அப்போதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Farmers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment