/indian-express-tamil/media/media_files/xTuBeu5PM6eeyi2xBFKv.jpeg)
பெலிக்ஸ் ஜெரால்டு மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தனியார் யூ-டியூபர் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விடுத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் வழக்கில் மற்றொரு நபராக தனியார் யூ டியூப் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார்.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டு க்கு திருச்சி நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் கோவை சைபர் கிரைம் காவல்துறையினரும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் பெலிக்ஸ் ஜெரால்ட்டை காவலில் எடுத்து விசாரிக்க 4"வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்றைய தினம் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.
இன்று மாலையுடன் விசாரணை முடிந்த பிறகு அவரை போலிசார் மீண்டும் நீதிமன்றத்தில் பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வருகின்ற 31ஆம் வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.
செய்தியாளர் பி ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.