/indian-express-tamil/media/media_files/2024/12/24/Xl3l3Un4VjCvFjjA75g1.jpg)
யானை உயிரிழப்பு
கோவை மாவட்டம் துடியலூர் அருகே பன்னிமடை- வரப்பாளையம் சாலையில் வனப்பகுதியில் இருந்து நேற்று இரவு வெளியே வந்த யானைக் கூட்டத்தை வன பணியாளர்கள் மற்றும் இரவு ரோந்து குழுவினர் திருப்பி அனுப்பினர்.
அந்த யானை கூட்டத்தில் இருந்து தனிமையாக இருந்த குட்டி யானையை இன்று காலை வனத் துறையினர் அந்த குட்டியை மீட்டு வனப்பகுதிக்கு அழைத்து சென்றனர்.
அப்போது அருகில் சுமார் 1 கிமீ தொலைவில் தனியார் நிலத்தில் பெண் யானை இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர். வனத் துறையினர் மீட்ட அந்த குட்டி யானை இறந்த பெண் யானை குட்டியின் தாயா இருக்குமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.
கோவையில் இறந்து கிடந்த யானை...வனத்துறையினர் விசாரணை...#Coimbatore#elephantpic.twitter.com/naMtNn2PgL
— Indian Express Tamil (@IeTamil) December 24, 2024
இது அந்த யானை கூட்டத்தை சேர்ந்ததா ? என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்தில் வன பணியாளர்கள் மற்றும் வன கால்நடை அலுவலர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு ஆய்வு நடத்தி பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.