/indian-express-tamil/media/media_files/2025/09/07/airport-moorthy-2025-09-07-13-21-15.jpg)
சென்னை டி.ஜி.பி வாயில் முன்பு தாக்குதல்: ஏர்போர்ட் மூர்த்தி மீது வழக்கு
மெரினா காவல் நிலையத்தில் புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரைத் தாக்கியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாசுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்க சிலர் வந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், புரட்சி தமிழகம் கட்சியை நடத்தி வரும் ஏர்போர்ட் மூர்த்தி அங்கு வந்திருந்தார். டிஜிபி அலுவலக நுழைவு வாயிலில் 4 பேர் கொண்ட கும்பல் எதிர்பாராத விதமாக ஏர்போர்ட் மூர்த்தியை சரமாரியாக தாக்கி உள்ளது. அடுத்த சில நிமிடங்களில் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகரான திலீபன், ஏர்போர்ட் மூர்த்தி தங்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்குதலும் நடத்தியதாக மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ஏர்போர்ட் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், ஏர்போர்ட் மூர்த்தி அளித்த புகாரின் பேரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலக வாயிலில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.