சென்னை மெட்ரோ 2-ம் கட்ட பணிகள்: 65 சதவீத நிதி மத்திய அரசு ஒதுக்கும்; நிர்மலா சீதாராமன்!

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுகாக ஆகும் மொத்த செலவில் 65 சதவீத நிதியை மத்திய அரசு ஒதுக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுகாக ஆகும் மொத்த செலவில் 65 சதவீத நிதியை மத்திய அரசு ஒதுக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
nirmala sitaraman

சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட பணிகளுக்காக மத்திய அரசின் சார்பில் 65 சதவீத நிதி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Advertisment

சென்னையில் ஏற்கனவே மெட்ரோ ரயில் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், மேலும் வழித்தடங்களை அதிகரிக்கும் வகையில் 2-ம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டிய மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளில் தோய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் டெல்லி சுற்றுப்பயணம் சென்ற முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்களை முன் வைத்தார். அதில், மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்காக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியானது. தற்போது மத்திய அரசு மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக, ரூ63,246 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் விரைவில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் சேவை பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுகாக ஆகும் மொத்த செலவில் 65 சதவீத நிதியை மத்திய அரசு ஒதுக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அதன்படி மத்திய அரசின் சார்பில் இந்த திட்டத்திற்கு ரூ63,246 கோடி வழங்கப்பட உள்ளது. மத்திய அரசின் திட்டம் என்பதால் பங்களிப்பு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகள் மத்திய அரசின் திட்டமானதால், ரூ33,593 கோடி முழு கடனும், சமபங்கு மற்றும் சார்நிலை கடனாக, ரூ7,425 கோடியும் அடங்கும். மேலும் இரு தரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ32,548 கோடி கடனாக திரட்ட மத்திய அரசு உதவி செய்துள்ளது. மேலும் எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டு தொகையை மாநில அரசு வழங்கும். திரட்டிய கடனில் இதுவரை ரூ6100 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு மேம்பாட்டு முகாம்களில் இருந்து பெறப்பட்ட கடன்கள், மாநில அரசின் கடனாக இல்லாமல் மத்திய அரசின் கடனாக கருதப்படும். மத்திய அரசின் படஜெட்டில் இருந்து நேரடியாக மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு நேரடியாக நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Metro

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: