/indian-express-tamil/media/media_files/2025/10/02/whatsapp-image-2025-10-02-at-2025-10-02-14-43-36.jpg)
மதுரை மீனாட்சி பஜாரில் நேற்று மாலை பரபரப்பான தீ விபத்து ஏற்பட்டது. ஆயுதபூஜை முடிந்து கடையில் ஏற்றிய விளக்கை அணைக்காமல் சென்றதால் தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைகளில் பூஜை நடத்தப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. மாலை நேரத்தில் விளக்கில் தீ பரவி காற்றின் வேகத்தால் கடைக்குள் எரிய தொடங்கியது. தீ விரைவில் மொபைல் போன்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு பரவியது.
இதனால் கடைகளில் இருந்த செல்போன்கள் வெடித்து சத்தம் எழுந்தது. அடுத்தடுத்த கடைகளிலும் தீ பரவியதால் 4 கடைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து சேதமானன.
தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.