Advertisment

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து; ஒருவர் பலி; 2 பேர் படுகாயம் - போலீஸ் விசாரணை

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ஒருவர் ம்ருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
mannarkudi fire

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ஒருவர் ம்ருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கர்த்தநாதபுரம் என்ற இடத்தில் சக்திவேல் என்பவர் சக்தி பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு நிறுவனத்தில் இன்று (ஜூன் 16) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து பட்டாசு ஆலை கட்டடம் தகர்ந்து தரைமட்டமானது. பட்டாசு வெடித்த சத்தம் அப்பகுதியில் சுமார் 1 கி.மீ தூரம் வரை கேட்டதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மன்னார்குடி தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தின்போது, பட்டாசு ஆலையில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது உயிரிழந்தார்.  மேலும், படுகாயமடைந்த 2 பேர் மன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மன்னார்குடி அருகே கர்த்தநாதபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்துக்கு காரணம் என்ன என்று மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment