Advertisment

துவரங்குறிச்சி: 4 பேர் பலியான விபத்தில் திறம்பட பணியாற்றிய தீயணைப்பு வீரர் 8 மணி நேரத்தில் பலி

துவரங்குறிச்சியில் 4 பேர் பலியான கார் விபத்தில் மீட்புப் பணியில் திறம்பட பணியாற்றிய தீயணைப்பு வீரர் கிருஷ்ணகுமார் 8 மணி நேரத்தில் விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil news, Latest tamil news, Trichy news, fire fighter death, Trichy, Thuvarankurichi death, Tamil nadu news, திருச்சி செய்திகள், தமிழ் செய்திகள், தீயணைப்பு வீரர் மரணம், Trichy accident, Tiruchi district

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை செவந்தாம்பட்டி பிரிவு அருகே நேற்று மாலை மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். கார்களில் சிக்கியிருந்த அவர்களை மீட்கும் பணியில் துவரங்குறிச்சி தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்பணிகள் துறை வீரர்கள் முழுமையாக ஈடுபட்டனர்.

இதில் பணியாற்றி முன்னணி தீயணைப்பாளர் கிருஷ்ணகுமார், நள்ளிரவு நிலையத்தில் பணியில் இருந்தவர் உணவு அருந்த சென்றுள்ளார்.

Advertisment

நீண்ட நேரமாகியும் நிலையம் திரும்பாதவரை சக வீரர்கள் தேடி சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் சென்றதில் படுகாயம் அடைந்த நிலையில் நெடுஞ்சாலை ஓரத்திலிருந்து கிருஷ்ணகுமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உடல் உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய உயிர்களை மீட்கும்பணியில் ஈடுபட்ட வீரர் அடுத்த 8 மணி நேரத்தில் விபத்தில் சிக்கி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சக வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tiruchi District
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment