தமிழக மீனவர்கள் 25 பேர் கைது: இலங்கை கடற்படையை கண்டித்து ஜூலை 5-ல் ரயில் மறியல் போராட்டம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை நேற்று (ஜுலை 1)  கைது செய்தது.  கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தும், 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பரிமுதல் செய்தும் உள்ளது. கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும் காங்கேசன்துறை முகாமில் வைத்து கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

ராமேஸ்வரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்கள் 4 நாட்டு படகுகளில் நேற்று கடலுக்கு சென்ற போது இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களை விடுவிக்க கோரி ஜூலை 5-ம் தேதி சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தை ராமநாதபுரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். 

அதே போல், ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஜுலை 2) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த வாரம் இதுபோல் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து ராமேஷ்வர மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடதக்கது. 

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: