/indian-express-tamil/media/media_files/2025/04/10/xZXx5e4l9IKtXCoT734F.jpg)
திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் ஆகஸ்ட் 19-ம் தேதி கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் ஆகஸ்ட் 19-ம் தேதி கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவை மீன்வளத்துறை பிறப்பித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (ஆகஸ்ட் 20) தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது.
முன்னதாக, இன்று (ஆகஸ்ட் 19) பிற்பகலில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். ஆகஸ்ட் 20-ம் தேதி தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்" என்று கூறியிருந்தது.
இந்தக் கடுமையான வானிலை காரணமாக, மீனவர்களின் பாதுகாப்புக் கருதி இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.