வலையில் சிக்கிய டால்பின்கள்; கடலில் விட்ட மீனவர்கள்: வீடியோ வைரல்

ராமநாதபுரத்தில் வலையில் சிக்கிய 3 டால்பின் மீன்களை மீனவர்கள் கடலில் விடுவித்தனர். இது தொடர்பான வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ராமநாதபுரத்தில் வலையில் சிக்கிய 3 டால்பின் மீன்களை மீனவர்கள் கடலில் விடுவித்தனர். இது தொடர்பான வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Fishermen released 3 dolphins caught in the net in Ramanathapuram

இது தொடர்பான வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு பகிர்ந்துள்ளார்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டம் காகலடியில் மீன்பிடி வலையில் தவறுதலாக சிக்கிய 3 டால்பின் மீன்களை அப்பகுதி மீனவர்கள் மற்றும் தமிழக வனத்துறையினர் பத்திரமாக மீட்டு கடலில் விடுவித்தனர்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர். இது தொடர்பான வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு பகிர்ந்துள்ளார்.

Advertisment

மேலும், டால்பின்களை காப்பாற்றிய மீனவர்களை வெகுவாக அவர் பாராட்டியுள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில், தமிழகத்தைச் சேர்ந்த சில மீனவர்களின் வலையில் தவறுதலாக மூன்று டால்பின் மீன்கள் சிக்கின.
இதையடுத்து, அவற்றைக் காப்பாற்ற மீனவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்ததாக அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தின் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டரில் இந்தப் போஸ்ட் பிப். 11ஆம் தேதி அன்று பகிரப்பட்டுள்ளது. இது 56,000 க்கும் மேற்பட்ட பார்வைகளையும் 1,500 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது. பலர் இடுகையின் கருத்துகள் பகுதியை எடுத்து கிளிப்புக்கு பதிலளித்தனர்.
நெட்டிசன்கள் பலரும் இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒருவர் கிரேட் ஓர்க் எனப் பாராட்டியுள்ளார்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ramanathapuram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: