Advertisment

மீனவ கிராமங்களை தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்கக்கோரிய மனு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

மீனவ கிராமங்களை தனிகிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மீனவ கிராமங்களை தனிகிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும்

மீனவ கிராமங்களை தனிகிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் மீனவ கிராமங்களை தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்கக்கோரிய கோரிக்கை மனு மீது நான்கு வாரங்களில் தகுந்த பதிலை அளிக்கும் படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில், மீனவர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பீட்டர் ராயன் தொடர்ந்த வழக்கில்,மீனவர்களை தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் வகுப்பில் சேர்த்து அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை தனி தொகுதியாக வரையறை செய்யவும் மீனவ கிராமங்களை தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 608 மீனவ கிராமங்களில் 9.24 லட்சம் மீனவ மக்கள் வசிக்கின்றனர். மீனவர்களை தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் வகுப்பில் சேர்த்து அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை தனி தொகுதியாக வரையறை செய்யவும், மீனவ கிராமங்களை தனிகிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என மண்டல் கமிஷன் கடந்த 1980 ஆம் ஆண்டு பரிந்துரைத்துள்ளது.

ஆகவே, மண்டல் கமிஷன் பரிந்துரை படி மீனவ கிராமங்களை கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு கொடுத்தும் இது வரை அரசு எந்த நடவடிக்கை இல்லை. எனவே மீனவ கிரமாங்களை தனி பஞ்சாயத்து அறிவிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து நான்கு வாரங்களில் தகுந்த பதிலை பிறப்பிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment