Advertisment

நீரில் ஒளிரும் விளக்குகள்.. மக்கள் வரவேற்பை பெற்ற லேட்டஸ்ட் லைட்!

நவீனமயமாக மாறிவரும் இவ்வூலகில் தினந்தோறும் ஏதாவது ஒரு புதிய கண்டுப்பிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுதான் வருகின்றன.

author-image
WebDesk
New Update
நீரில் ஒளிரும் விளக்குகள்.. மக்கள் வரவேற்பை பெற்ற லேட்டஸ்ட் லைட்!

நீரில் விளக்கு எரியுமா? என்று இனி கேட்க முடியாது. விளக்கு எரிய ஒரு டம்ளர் நீர் போதும். இந்த விளக்கு மீது நீரை ஊற்றியதும் அதன் மேல் பொருத்தப்பட்டுள்ள பல்பு எரிய ஆரம்பிக்கும்.

Advertisment

நாம் நீரை ஊற்றும் போது அதன் மேல் பொருத்தப்பட்டுள்ள குண்டூசிகள் பேட்டரியின் மீது பட்ட உடன் அதில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு எரியத் தொடங்குகிறது.

இது முற்றிலும் பாதுகாப்பானது, செலவில்லாதது. நீரில் வைத்து மின்சாரம் உற்பத்தி செய்து எல்.இ.டி. விளக்கு எரிவது போன்று தற்பொழுது நீரை ஊற்றினாலே விளக்கு எரியும் வசதி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நவீனமயமாக மாறிவரும் இவ்வூலகில் தினந்தோறும் ஏதாவது ஒரு புதிய கண்டுப்பிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுதான் வருகின்றன.

கடந்த காலத்தில் நமது முன்னோர்கள் எண்ணையை ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டு வந்தனர். ஆனால் தற்பொழுது தலைமுறையினர் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் எவ்வித செலவுமின்றி தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை சிவானந்தா காலனி பகுதியில் சமீபத்தில் திருமணம் ஆன ரமேஷ் புவனேஸ்வரி தம்பதியினர் தங்கள் வீட்டு முன்பு உள்ள இடங்களில் இது போன்ற விளக்குகளை ஏற்றியும், வீட்டுக்கு உள்ள பூஜையறையில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.

இதேபோல் பலரின் வீடுகளிலும் இதே போன்று நவநாகரீக விளக்கு ஒளிர்ந்ததை பார்க்க முடிந்தது.

செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment