Advertisment

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு;  கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

அணையின் 4 மதகுகள் வழியாக 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணை திறக்கப்பட்டுள்ளதால் கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்

author-image
WebDesk
New Update
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு;  கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் அட்டப்பாடி, முக்காலி, மட்டத்துகாடு போன்ற பகுதிகளில் தற்போது பருவமழை பெய்து வருகிறது.

Advertisment

இதன் காரணமாக பில்லூர் அணைக்கான நீர் படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு மேல் அணைக்கான நீர் வரத்து 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இதனால் பில்லூர் அணையின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்த நிலையில் அணையின் முழுகொள்ளவான 100 அடியில் 97அடி வரை தண்ணீர் நிரம்பியது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதன்படி அணையின் 4 மதகுகள் வழியாக 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணை திறக்கப்பட்டுள்ளதால் கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் ஆறுகளில் யாரும் குளிக்க வேண்டாம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment