திருச்சி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது, ஆகையால் கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க செல்ல வேண்டாம், பாலங்களில் நின்று செல்ஃபி எடுக்க வேண்டாம்.

காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது, ஆகையால் கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க செல்ல வேண்டாம், பாலங்களில் நின்று செல்ஃபி எடுக்க வேண்டாம்.

author-image
WebDesk
New Update
A tiruchi

காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது, ஆகையால் கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க செல்ல வேண்டாம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு மேட்டூர் அணையிலிருந்து 2100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதேநேரம் கரூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகள் மற்றும் காவிரி கரையோரங்களில் கன மழை பெய்து வருவதால் முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Advertisment

இதனால், திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து நாளை (25.05.2024) கொள்ளிடம் ஆற்றில் 2000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அதே நேரம், காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது, ஆகையால் கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க செல்ல வேண்டாம், பாலங்களில் நின்று செல்ஃபி எடுக்க வேண்டாம், மேலும் சலவைத் தொழில் செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக துணிகளை வைக்கவும் மற்றும் கரையோரம் வசிக்கும் மக்கள் தங்களது கால்நடைகளை ஆற்றில் மேய்ச்சலுக்கு விட வேண்டாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் தற்பொழுது அறிவுறுத்தி வருகின்றனர்.

செய்தி: க. சண்முகவடிவேல்

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tiruchirapalli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: