கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு ஹெலிகாப்டர் மூலம் 1.3 டன் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.
தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, குமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் சிக்கி தவித்து வருகின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தமிழக அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![helicopter relief 2](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/ahRbPw4ZmZCn8jea7sXd.jpg)
இதனிடைய கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் சார்பில் திருநெல்வேலி வெள்ள நிவாரணப் பணிகளுக்கு 1.3 டன், பால் பொருட்கள், பிரெட் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“