/tamil-ie/media/media_files/uploads/2022/08/vaigai-flood.jpg)
மதுரை, வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு
வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு, வைகை ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
நீர் வரத்து அதிகமாக செல்வதால், வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இரு புறமும் கரையை உரசியவாறு நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் விவசாயப் பணிகளுக்காக நேற்று வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது.
வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இன்று வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் உயர்ந்துள்ளதால், சிம்மக்கல் தரை பாலத்தை உரசிய வாரே நீர் செல்கிறது.
மேலும் இணைப்பு சாலையில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆற்றுக்குள் இறங்குவது, புகைப்படம் எடுப்பதை தவிர்க்கும் விதமாக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர் செந்தில் குமார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.