Advertisment

சென்னை வெள்ளப் பகுதிகளில் நாளை ஹெலிகாப்டர் மூலமாக உணவு விநியோகம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அறிவிப்பு

சென்னையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு நாளை (டிச.6) ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamilnadu

சென்னை வெள்ளப் பகுதிகளில் நாளை ஹெலிகாப்டர் மூலமாக உணவு விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு நாளை (டிச.6) ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

அப்போது, “விரைவில் சென்னை மற்றும் புறநகரில் இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றும் அமைச்சர் கூறினார்.

வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

தற்போது புயல் ஆந்திரா மாநிலம் அருகே நிலைகொண்டுள்ளது. வரும் 5ம் தேதி முற்பகலில் நெல்லூர்- மசுலிப்பட்டினம் இடையே கரையை கடந்துள்ளது.

முன்னதாக, மிக்ஜாம் புயல் மழை பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக பகுதிவாரியாக அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, சென்னை மண்டலத்துக்கு உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு ஆகியோர் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai Rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment