Advertisment

உணவுப் பாதுகாப்பில் சிறந்த செயல்பாடு: தேசிய அளவில் திருச்சி மாவட்டத்திற்கு விருது

திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறைக்கு மத்திய அரசின் சிறந்த செயல்பாட்டிற்கான சான்று வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
Jun 10, 2023 14:54 IST
Trichy

Trichy

தமிழகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை செயல்பட்டு வருகிறது. உணவுப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனைகளில் கலப்படம் செய்வதைத் தடுப்பது, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனையைத் தடுப்பது, ரசாயனம் மூலம் பழங்கள் பழுக்க வைப்பதைத் தடுப்பது, கெட்டுப்போன மீன் மற்றும் இறைச்சி விற்பனையைத் தடுப்பது, பாட்டில்கள் மற்றும் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீா், சமையல் எண்ணெய் ஆகிவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையை முறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை இத்துறை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisment

திருச்சி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ஆா். ரமேஷ்பாபு தலைமையில் செயல்படும் இந்தத்துறையின் அதிகாரிகள் திருச்சி மாவட்டத்தில் கலப்பட எண்ணெய் நிறுவனங்களுக்கு சீல் வைத்தது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் வைப்பது எனப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையரகம் சார்பில் தேசிய அளவில் சிறந்த செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் மாவட்டங்களைத் தோ்வு செய்ததில் திருச்சி மாவட்டமும் தோ்வு செய்யப்பட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது.

publive-image

தேசிய உணவு பாதுகாப்புத் தினமான ஜூன் 7 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் இந்தச் சான்றை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மான்சுக் எல், மாண்டவியா மற்றும் மத்திய அமைச்சா் எஸ்பி. சிங் ஆகியோர் திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபுவிடம் வழங்கினர்.

டெல்லியில் சான்றைப் பெற்று வந்த நியமன அலுவலா் டாக்டர், ரமேஷ்பாபு அந்தச் சான்றை திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். இச்சாதனைக்கு காரணமான உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை குழுவினா் மற்றும் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு நன்றி என டாக்டர் ரமேஷ்பாபு தெரிவித்தார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Food #Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment