Advertisment

சென்னையில் 162 நிவாரண முகாம்கள்; மாநகராட்சி சார்பில் உணவு சப்ளை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 162 முகாம்களுக்கு, 20 உணவு கூடங்களில் இருந்து உணவு கொண்டு செல்லப்பட்டன. நாளை முற்பகலில் நெல்லூர்- மசுலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும்.

author-image
WebDesk
New Update
chennai rain 1

சென்னை அதிகனமழை வெள்ளத்தால் இதுவரை 5 இறப்புகள் பதிவாகியுள்ளன என மாநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Michaung Cyclone: வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இது சென்னையிலிருந்து 310 கி.மீ திசையில் நிலைகொண்டது.

இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி நகரும்.

Advertisment

வரும் 5ம் தேதி முற்பகலில் நெல்லூர்- மசுலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும்.

புயல் காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுன்னது. நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி  ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை  கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு தயார் செய்து விநியோகம் செய்யப்பட்டுவருகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 162 முகாம்களுக்கு, 20 உணவு கூடங்களில் இருந்து உணவு கொண்டு செல்லப்பட்டன.

சென்னை மழை காரணமாக கணேசபுரம், கெங்கு ரெட்டி, செம்பியம், வில்லிவாக்கம், துரைசாமி, மேட்லி, ரங்கராஜபுரம், மவுண்ட், சைதாப்பேட்டை, பழவந்தாங்கல், சிபி சாலை, வியாசர்பாடி, திருவொற்றியூர், ஆர்பிஐ சுரங்கபாதை, கோயம்பேடு, சேத்துப்பட்டு, சூளைமேடு சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதுவரை 37 இடங்களில் முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment