மெரினா கடற்கறையில் வெளிநாட்டு துப்பாக்கி கண்டெக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நொச்சிகுப்பத்தில் வசித்து வரும் சுரேஷ் என்ற மீனவர் மெரினா கடற்கரையில் சிப்பிகளை எடுக்கும் பணியை மேற்கொண்டார். அப்போது கலங்கரை விளக்கம் கடற்கறையில் துப்பாக்கியை எடுத்த சுரேஷ். அதை கடலோர பாதுகாப்பு குழும போலிசாரிடம் ஒப்படைத்தார். மேலும் அந்த துப்பாக்கியில் ’made in germany’ என்று எழுதி இருந்ததாகவும், அதில் தோட்டாக்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.