Advertisment

ஸ்டாலின் குறித்து ஆபாச பேச்சு; பொதுக் கூட்டத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு நீதிபதி உத்தரவு!

முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியது குறித்து பொதுக் கூட்டம் நடத்தி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்படி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Kumaraguru

ஸ்டாலின் குறித்து ஆபாச பேச்சு; பொதுக் கூட்டத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு நீதிபதி உத்தரவு!

முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியது குறித்து பொதுக் கூட்டம் நடத்தி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்படி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கள்ளக்குறிச்சியில் உள்ள மந்தைவெளி பகுதியில் செப்டம்பர் 19-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க சார்பில் அண்ணா நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு, தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக, கள்ளக்குறிச்சி தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் புகார் அளித்தார். 

கள்ளக்குறிச்சி தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் அளித்த புகாரின் அடிப்படையில், குமரகுரு மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Kumaraguru

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி குமரகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது பேச்சு குறித்து சமூக வலைதளத்தில் மன்னிப்பு கோரிய பிறகும், அரசியல் உள்நோக்கத்தோடு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், காவல்துறையிடம் குமரகுரு முறையான அனுமதி பெற்று மற்றொரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் தனது பேச்சு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். இந்த நிபந்தனையை நிறைவேற்றியது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment