Advertisment

'கொக்கைன்' போதைப்பொருள் கடத்தல்: முன்னாள் டி.ஜி.பி மகன் கைது

கொக்கைன் எனும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக முன்னாள் டி.ஜி.பி ரவீந்திரநாத் மகன் அருண் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேகலன் மற்றும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரும் கைதாகியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Former DGP Ravindranath son Arun arrested for cocochine trafficking Tamil News

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக முன்னாள் டி.ஜி.பி மகன் சென்னையில் கைது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல் துணை ஆணையர் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. 

Advertisment

இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் நேற்று (அக்.24) தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரியாவின் ஜான் எஸி, மெக்கலன் மற்றும் அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடமிருந்து 2.5 கிராம் மெத்தம்பெட்டமைன், ரூ. 1 லட்சம் ரொக்கம், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அருண் முன்னாள் டி.ஜி.பி ரவீந்திரநாத் மகன் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சென்னையில், போதைப்பொருள் விற்பனை தொடர்பாக கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது போதைப்பொருள் கடத்தல் வழககில் முன்னாள் டி.ஜி.பி மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர் உள்ளதா? இவர்களுக்கு போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment