/tamil-ie/media/media_files/uploads/2022/12/Masthan-1.jpg)
திமுக முன்னாள் எம்பி மஸ்தான்
சென்னை சேப்பாக்கத்தில் வசித்து வந்தர் மஸ்தான். 66 வயதான இவர், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் துணை தலைவராகவும், திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவுச் செயலாளராகவும் இருந்து வந்தார்.
இவர் 1995ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவந்தார். அதன்பிறகு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமானார்.
இந்த நிலையில் மஸ்தான், 2022 டிச.22ஆம் தேதி காரில் திருச்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில் மஸ்தான் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சென்னை கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் அவரது மகன் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மஸ்தான் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து மஸ்தானை கொன்றதாக அவரது கார் டிரைவர் இம்ரான், உறவினர் சித்தா டாக்டர் சுல்தான் அகமது, நண்பர்கள் நசீர், தவுபிக், லோகேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இம்ரான் பாஷா அளித்த வாக்குமூலத்தில் நான் அவரிடம் ரூ.15 லட்சம் சிறிது சிறிதாக கடன் வாங்கி இருந்தேன்.
அந்தக் கடனை தனது மகன் திருமணத்தை காரணம் காட்டி அவர் திருப்பிக் கேட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நண்பர்களுடன் இணைந்து அவரைக் கொன்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.