டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி. வேலுமணி மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு - ஐகோர்ட் உத்தரவு

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்குகள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்குகள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
velumani

எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கு; நீதிமன்றம் முக்கிய உத்தரவு

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது பதவிக் காலத்தில் மாநகராட்சி ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Advertisment

முன்னாள் நகராட்சி நிர்வாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தனது பதவிக் காலத்தில் மாநகராட்சி ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி அவர் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.

நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி டீக்கா ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, எஸ்.பி. வேலுமணி தரப்பு மூத்த வழக்கறிஞர் எஸ்.வி.ராஜு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சுண்முகசுந்தரம் மற்றும் மாநில அரசு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (டிவிஏசி) சார்பில் அரசு வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆகியோர் முன்வைத்த வாதங்களைக் கேட்ட பின்னர் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில், தி.மு.க-வைச் சேர்ந்த புகார் தாரர் ஆர்.எஸ். பாரதியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவும் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் சார்பில் வழக்கறிஞர் வி.சுரேஷ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

Advertisment
Advertisements

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் தனது வாதங்களை முன் வைத்த வழக்கறிஞர் சுரேஷ் கூறுகையில், தனது கட்சிக்காரரின் புகார் ஆவண ஆதாரங்களால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது. அந்த ஆவணங்கள் 2005 ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்டு, டி.வி.ஏ.சி-யிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த ஆவணங்கள் ஒப்பந்தங்கள் வழங்குவதில் உள்ள ஒத்துழைப்பை வெளிப்படுத்தியது. பல ஒப்பந்தங்கள் ஒரே இன்டர்நெட் புரோட்டோகால் (ஐபி) முகவரியில் இருந்து ஒரே நாளில் தங்கள் ஒப்பந்தங்களை சமர்ப்பித்துள்ளன.

இந்த ஒப்பந்தம் எடுக்கப்பட்டதில், ஒரே நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் அடையாளம் காணப்பட்டு அந்த நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்ததாக வழக்கறிஞர் வாதிட்டார். முன்னாள் அமைச்சரும் இந்த கும்பலின் ஒரு அங்கம் என்று அவர் குற்றம் சாட்டினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Sp Velumani Chennai High Court Aiadmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: