காஞ்சிபுரத்தில் ‘ என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின்போது 41 ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களாக ’என் மண் என் மக்கள்’ யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். தமிழகம் முழுவதும் செல்ல திட்டமிடப்பட்ட யாத்திரை கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. நடுவில் சில நாட்கள் யாத்திரை நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த யாத்திரை இன்றுடன் முடிய உள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை 19 தொகுதிகளுக்கு அண்ணாமலை யாத்திரை செய்த நிலையில் நேற்று காஞ்சிபுரம், பூந்தமல்லி, உத்திரமேரூர் பகுதிகளில் யாத்திரை செய்தார். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் ’என் மண் என் மக்கள் ’ யாத்திரையின்போது பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் 41 ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் பாஜகவில் இணைந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“