/indian-express-tamil/media/media_files/44rKPBcbZN3RsdWRUgZ7.jpg)
தி.மு.க-வில் மரியாதை இல்லாததால், அந்த கூட்டணியில் இருந்து விளகி உள்ளோம் என்று பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் எல்லா கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பா.ம.க மற்றும் தே.மு.தி.க கட்சிகள் அ.தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் புதிய தமிழகம் கட்சி செவ்வாய்க்கிழமை அ.தி.மு.க கூட்டணியை உறுதி செய்த நிலையில், பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவனும் இன்று இ.பி.எஸ்-யை சதித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்புக்கு பின்பு பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவன், தி.மு. க கூட்டணியில் மரியாதை இல்லை என்பதால் விலகியதாகவும், தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தேனி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.