/indian-express-tamil/media/media_files/2Lxb5QM8aGnOks6cyIVO.jpg)
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடக்கி உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரங்களில் இருந்து சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சற்று வெப்பம் தணிந்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 15) 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு
காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் கூறியுள்ளது.
#JustNow | கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!#SunNews | #RainUpdate | #TamilNadupic.twitter.com/mYCePBmmol
— Sun News (@sunnewstamil) April 15, 2024
கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.