/indian-express-tamil/media/media_files/GQVBPCUSEfDKWUKCBVMw.jpg)
தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு
தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா திங்கள்கிழமை (செப்டம்பர் 25) உத்தரவிட்டார்.
பூஜா குல்கர்னி, நிர்மல்ராஜ், அர்ச்சனா பட்நாய்க், ஹர் சகாய் மீனா ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா திங்கள்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை ஆணையராக நிர்மல்ராஜ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறு குறு, நடுத்தர தொழில் துறை செயலாளராக அர்ச்சனா பட்நாய்க் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையராக ஹர் சகாய் மீனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.