Advertisment

தமிழகத்தில் நடிகர் விவேக் உள்ளிட்ட 14 பேர் மரணம் தடுப்பூசியால் நடக்கவில்லை - மத்திய அரசு

தடுப்பூசி போடப்பட்டதைத் தொடர்ந்து ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் தொடர்பாக தமிழ்நாட்டில் பதிவாகியுள்ள 14 மரணங்களில் எதற்கும் கோவிட்-19 தடுப்பூசிக்கு பங்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
தமிழகத்தில் நடிகர் விவேக் உள்ளிட்ட 14 பேர் மரணம் தடுப்பூசியால் நடக்கவில்லை - மத்திய அரசு

மத்திய சுகாதார அமைச்சகத்தின் விபத்து மதிப்பீட்டு அறிக்கையின்படி, தடுப்பூசி போடப்பட்டதைத் தொடர்ந்து ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் தொடர்பாக தமிழ்நாட்டில் பதிவாகியுள்ள 14 மரணங்களில் எதற்கும் கோவிட்-19 தடுப்பூசிக்கு பங்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டில், தடுப்பூசி போடப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் விவேக் உட்பட 14 மரணங்கள் மாநிலத்தில் பதிவாகியுள்ளன. இதில், 11 மரணங்கள் தற்செயலானவை என்ற சி வகையை சேர்ந்தது. தடுப்பூசி அல்லாத வேறு ஏதோவொன்றின் காரணமாக ஏற்பட்டவை. மூன்று இறப்புகள் தடுப்பூசியுடன் தற்காலிக தொடர்புகொண்ட பி1 வகையைச் சேர்ந்தது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதன் மூலம், கோவிட் தடுப்பூசி காரணமாக மரணம் நடந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் நிறுவப்படவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக செயற்பாட்டாளர் தயானந்த் கிருஷ்ணன் கேட்ட கேள்விக்கு இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் 11 பேர் 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். 3 பேர் 20 வயதுடையவர்கள். ஏப்ரல் 24ம் தேதி தடுப்பூசி போட்ட 25 வயது ஆண் ஒருவர் வலிப்பு நோய் காரணமாக இறந்தார். ஜூன் 8ம் தேதி தடுப்பூசி போட்ட 20 வயது பெண் ஒருவருக்கு குழந்தைகளில் இருந்து பல்வேறு நோய் குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது. இதனால், முதல் மரணம் சி வகையிலும், இரண்டாவது மரணம் பி1 வகையிலும் குறிக்கப்பட்டது.

மற்ற இரண்டு பி1 வகை மரணங்களும் திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த 69 வயது பெண், அதிர்ச்சியால் ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 51 வயது பெண் இறந்துள்ளனர். இந்த மூன்று இறப்புகளுக்கும் மேற்படி ஆய்வுகள் தேவை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசியைத் தொடர்ந்து மரணமடைந்த 14 பேரில், ஐந்து பேர் கோவிட்-19 நோயால் இறந்தனர். இதில் 23 வயது ஆண் ஒருவருக்கு நோய் இல்லை. நான்கு பேருக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், ஹைப்போ தைராய்டு, புற்றுநோய் போன்ற இணை நோய்கள் இருந்தன. மிகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆபத்தான அறிகுறிகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு, அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படுகின்றன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Covid 19 Vaccine Tamilnadu Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment