புதுச்சேரி - பிரான்ஸ் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் நடைபெற்ற போட்டி: உற்சாகமாக கலந்துகொண்ட போட்டியாளர்கள்  

புதுச்சேரி - பிரான்ஸ் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் நடைபெற்ற பெத்தாங் போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் விளையாடினர்.

புதுச்சேரி - பிரான்ஸ் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் நடைபெற்ற பெத்தாங் போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் விளையாடினர்.

author-image
WebDesk
New Update
புதுச்சேரி

புதுச்சேரி - பிரான்ஸ் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் நடைபெற்ற பெத்தாங் போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் விளையாடினர்.

Advertisment

புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த போது1858 ஆம் ஆண்டு சர்க்கிள் டி பாண்டிச்சேரி என்ற கிளப் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பிரெஞ்சு கலாச்சாரம் மாறாத வகையில் இங்கே பல்வேறு பாரம்பரியமிக்க போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் ஒன்றான புதுச்சேரி பிரான்ஸ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பெத்தாங்கு எனப்படும் போட்டி கையெறி குண்டு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு சுற்றுலாவாக வந்துள்ள பிரான்ஸ் நாட்டு பயணிகள் புதுச்சேரியில் உள்ள சர்க்கிள் பாண்டிச்சேரியில் விளையாடப்படும் பெத்தாங் போட்டியில் கலந்து கொண்டு விளையாட வேண்டும் என்று தூதரகத்தின் அனுமதியோடு புதுச்சேரி வந்தனர்.

Advertisment
Advertisements

13 பேர் குழுவாக வந்த பிரான்ஸ் நாட்டவர்கள் இன்று புதுச்சேரி சட்டசபை அருகே உள்ள சர்க்கிள் டி பாண்டிச்சேரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டனர். இதில் புதுச்சேரியை சார்ந்த பெத்தாங் அசோசியேஷன் சார்பில் புதுச்சேரியில் இருந்தும் மூன்று குழுவாக கலந்து கொண்டு போட்டியில் விளையாடினர்.

புதுச்சேரி பிரான்ஸ் பெத்தாங் நல்லுறவு போட்டியை புதுச்சேரி பெத்தாங் அசோசியேஷன் தலைவர் ஜெகதீசன் தொடங்கி வைக்க செயலாளர் பாலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் கூறும் போது. புதுச்சேரி 1858 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த போது சர்க்கிள் டி பாண்டிச்சேரி கிளப் உருவாக்கப்பட்டது. அங்கு பாரம்பரியமிக்க பெத்தாங் போட்டி நடத்தப்படும் இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் விளையாடுகின்றனர் அந்த பாரம்பரியத்தை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் இந்திய தூதரகத்தின் அனுமதியோடு இந்த போட்டியில் கலந்து கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: