சென்னையில், குளிர்சாதன பெட்டி வெடித்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரில் கிரிஜா என்பவர் வசித்துவருகிறார். இவரின் வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, குளிர்சாதனப் பெட்டி திடீரென்று வெடித்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்து கிரிஜா, அவரது தங்கை ராதா உறவினர் ராஜ்குமார் ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.