இருமுடி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 1 முதல் 28 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 1-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை சென்னை - திருச்சி செல்லும் ராக்போர்ட் அதிவிரைவு ரயிலும் (12653), ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந் தேதி வரை சென்னை - செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலும் (12661), ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந் தேதி வரை மதுரையில் இருந்து வரும் சென்னை எழும்பூர் வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலும் (12638), மதுரையில் இருந்து வரும் சென்னை வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலும் (12636) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.
அதே போல் ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை செங்கோட்டை - தாம்பரம் வரும் அதிவிரைவு ரயில் (20684), ஜனவரி 2-ந்தேதி முதல் பிப்ரவரி 9-ந்தேதி வரை செங்கோட்டையில் இருந்து வரும் தாம்பரம் வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலும் (20682), ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து வரும் தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் (20692) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
ஜனவரி 1-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை காரைக்காலில் இருந்து வரும் தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16176) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும். இவ்வாறாக மொத்தம் 28 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“