/indian-express-tamil/media/media_files/2024/12/23/aE75LP3x8lN0nKfE2bSe.jpg)
இருமுடி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 1 முதல் 28 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 1-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை சென்னை - திருச்சி செல்லும் ராக்போர்ட் அதிவிரைவு ரயிலும் (12653), ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந் தேதி வரை சென்னை - செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலும் (12661), ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந் தேதி வரை மதுரையில் இருந்து வரும் சென்னை எழும்பூர் வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலும் (12638), மதுரையில் இருந்து வரும் சென்னை வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலும் (12636) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.
அதே போல் ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை செங்கோட்டை - தாம்பரம் வரும் அதிவிரைவு ரயில் (20684), ஜனவரி 2-ந்தேதி முதல் பிப்ரவரி 9-ந்தேதி வரை செங்கோட்டையில் இருந்து வரும் தாம்பரம் வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலும் (20682), ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து வரும் தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் (20692) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
ஜனவரி 1-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை காரைக்காலில் இருந்து வரும் தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16176) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும். இவ்வாறாக மொத்தம் 28 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.