Advertisment

சனாதன சர்ச்சை: அரசியல் பாதையை கண்டறிந்த உதயநிதி ஸ்டாலின்!

உதயநிதியின் சிறந்த அரசியல் செயல்பாட்டிற்கு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டாமல் மத்திய அரசு காலம் தாழத்தியதை வெளிக்கொண்டுவந்தது சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது.

author-image
WebDesk
New Update
Sanatan Dharma remarks

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், சனாதனத்தை டெங்கு, மலேரியா, கொரோனா, கொசு உள்ளிட்டவற்றுடன் ஒப்பிட்டு பேசினார்.

தமிழ்நாட்டில் அரசியலுக்கு இணையான சக்தி சினிமாவுக்கு உண்டு. இதில் இருந்து அரசியலுக்கு வந்தவர் உதயநிதி ஸ்டாலின்.

45 வயதான அவர் தற்போது அரசியல் கவனத்தை ஈரத்துள்ளார். சனாதனம் தொடர்பான அவரது கருத்துகளுக்கு பிரதமர் முதல் உள்துறை அமைச்சர் வரை பதிலளித்துள்ளனர்.

Advertisment

தற்போது அவர் வலுவான பாஜக எதிர்ப்பு குரலாக உள்ளார். அந்த வகையில், கருணாநிதி குடும்ப வாரிசின் பெயர் இன்று நாடு முழுக்க கவனம் ஈர்த்துள்ளது.

மேலும் மு.க. ஸ்டாலின் ஒப்பிடும்போது உதயநிதி அவரது தாத்தா கருணாநிதிபோல் திரையுலகத்துடன் தொடர்பில் உள்ளார்.

கருணாநிதி புகழ்பெற்ற எழுத்தாளராக, கதை ஆசிரியராக திகழ்ந்தார். உதயநிதி படத்தின் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் திகழ்கிறார்.

இந்த நிலையில் மு.க. ஸ்டாலின், கருணாநிதி மறைவுக்கு பின்னர் தி.மு.க. தலைவராகவும், பின்னர் முதல் அமைச்சராகவும் வந்தார்.

ஆனால் அதிகார மையத்தில் இருந்து சற்று விலகியிருந்த உதயநிதி, சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரங்களை தாங்கி நடித்தார்.

நகைச்சுவை நடிகர் சந்தானத்துடன் இணைந்து அழகான நகைச்சுவை காட்சிகளை கொடுத்தார். கருணாநிதி சினிமாவில் தீவிரமான சமூக கருத்துகளை முன்வைத்தார்.

2014ஆம் ஆண்டு உதயநிதி அரசியலுக்கு வந்தபோதும் அவரது படங்கள் மாறாமல் இருந்தன. அவர் எம்.எல்.ஏ ஆகி அமைச்சராக உயர்ந்த பின்பு அவரது நடிப்பில் மாமன்னன் என்ற படம் வந்தது.

இந்தப் படமும் அவரது சனாதன கருத்துக்கள் போல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படத்தில் உதயநிதி, எம்.எல்.ஏ. மகனாக இருந்தாலும் சமூக நீதியைப் பேசும் கட்சிக்குள் உள்ள பாகுபாடுகளை எதிர்கொள்ளுவத போல் நடித்திருப்பார்.

இருப்பினும், கருணாநிதியின் அரசியல் பாரம்பரியத்திற்கான பாதை உதயநிதி போல் எளிதானது அல்ல. 1950களில் நடந்த இந்தி எதிர்ப்பு இயக்கம், கள்ளக்குறிச்சி ரயில் மறியல் போன்ற பல அரசியல் போராட்டங்களால் கருணாநிதி அறியப்பட்டார்.

தொடர்ந்து, தனது சமகாலத்தவர்களிடையே கூட, தனது எழுத்துக்களின் மூலம் நேரடித் தொடர்பைப் பெற்றார்.

திமுக அதிகார மையத்தோடு நெருக்கமாக இருக்கும் எம்.எல்.ஏ ஒருவர் இது குறித்து பேசுகையில், “திமுக முன் உள்ள சவால்கள் குறித்த உதயநிதி நன்கு அறிவார்.

அதற்கு ஏற்றால்போல் அவர் நடந்துகொள்வார்” என்றார். மேலும், “உதயநிதி மரபுகளை தற்போது ஆராயத் தொடங்கியுள்ளார்” என்றார்.

மேலும் உதயநிதி, மு.க. ஸ்டாலினை விட கருணாநிதிக்கு நெருக்கமானவராக காணப்படுகிறார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் பாஜகவின் வாக்குறுதியை செங்கலை காட்டி அழகாக அம்பலப்படுத்தினார். அப்போது அவரது அவருடைய செயல்திட்டமானது திறம்பட செயல்பட்டது.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பாஜக அழைக்கவில்லை என உதயநிதி பேசியதை திமுகவினர் சிறந்த எடுத்துக்காட்டாக கூறுகின்றனர்.

ஆனால் உதயநிதி சனாதன தர்மத்தின் சிக்கல்களை, குறிப்பாக பாஜகவால் வரையறுக்கப்பட்டுள்ள இந்து மதத்தின் சூழலில் நன்கு அறிந்தவரா? ஒருவேளை இல்லை என்று அவரது உதவியாளர் ஒருவர் கூறுகிறார்.

கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்த உதவியாளர், உதயநிதி செய்ததை விட சனாதன தர்மத்தைப் பற்றி கூறுவதற்கு திமுக தலைவர் சிறந்த கட்டமைப்பைக் கண்டுபிடித்திருப்பார் என்பதை ஒப்புக்கொள்கிறார்.

"கருணாநிதி ஒரு வலுவான செய்தியை வழங்கினாலும், நம்பிக்கைக்காக மலேரியா அல்லது கோவிட் போன்ற நோய் உருவகங்களைப் பயன்படுத்தியிருக்க மாட்டார்" என்று உதவியாளர் கூறுகிறார்.

‘From playboy to a fair boy’: In Sanatan Dharma row, Udhayanidhi finds his political feet

ஆனால், ஒரு காலத்தில் நாத்திகம் என்று சத்தியம் செய்த தி.மு.க.வும், அதன் முதல் குடும்பமும் இப்போது வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்கின்றன,

அங்கு தனித்துவ அடையாளங்கள் நீடித்து நிலைக்க கடினமாக உள்ளன. உதயநிதி தன்னை நாத்திகராக அடையாளப்படுத்தியதில்லை, உதாரணத்திற்கு, அவர் அமைச்சராகும் வரை அவரது வீட்டில் பூஜை அறை இருந்தது. ஸ்டாலின் அவ்வளவு தூரம் சென்றதில்லை, ஆனால் அவரது மனைவி மத நம்பிக்கை கொண்டவர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, உதயநிதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அனைவருக்கும் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்து, விநாயகர் சிலை வைத்திருக்கும் படத்தை ட்வீட் செய்தபோது நடந்த ஒரு சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவரது தந்தையின் தலையீட்டைத் தொடர்ந்து, ட்வீட் நீக்கப்பட்டது," என்று உதவியாளர் கூறுகிறார்.

தொடர்ந்து, அந்த இடைவெளியை நிரப்ப உதயநிதி, கருணாநிதியின் சுயசரிதையான நெஞ்சுக்கு நீதி மற்றும் கட்சிக்கு அடித்தளமிட்ட பெரியார் மற்றும் திமுக நிறுவனர் சி.என்.அண்ணாதுரை ஆகியோரின் வாழ்க்கை பற்றிய புத்தகங்களைப் படித்துவிட்டு, அந்த இடைவெளியை நிரப்ப முயற்சி செய்ததாக உதவியாளர் கூறுகிறார்.

வாசிப்புப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அவரது உதவியாளர்களில் ஒருவர், தினசரி வாசிப்பதற்காக புத்தகங்களிலிருந்து முக்கிய பகுதிகளை பரிந்துரைப்பார். தற்போது அவர் அம்பேத்கரின் எழுத்துக்களைப் படித்து வருகிறார்” என்று உதவியாளர் கூறுகிறார்.

அவரது வார்த்தைகளில், உதயநிதி ஒரு விளையாட்டுப் பையனாக இருந்து அழகான பையனாக மாறுவதை நாம் காண்கிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Udhayanidhi Stalin Dmk Stalin Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment