Advertisment

பிறந்து 20 நாட்கள் ஆன ஆண் குழந்தை: விற்க முயன்ற 4 பேர் கைது

பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்க முயற்சி செய்த, 3 பெண்கள் உள்பட 4 பேரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
sade

பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்க முயற்சி செய்த, 3 பெண்கள் உள்பட 4 பேரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

கண்ணன் ராமசாமி( வயது 51), ஹேமலதா ( வயது 27), சரண்யா ( வயது 33) ஆகியோர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். முருகேஷ்வரி ( 22 வயது) மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்.  இவர்களை மத்திய குற்றப்பிரிவை சேர்ந்த சிறப்பு படை காவலர்கள் பெங்களூரில் கைது செய்துள்ளனர்.

இந்த சிறப்பு படைக்கு கிடைத்த ரகசிய தகவலை வைத்து, இந்த 4 பேரும் குழந்தையை, ஒரு தம்பதியிடம் விற்க முயற்சி செய்தபோது கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில் “ இந்த 4 பேரும், ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ராஜராஜேஸ்வரர் கோவிலுக்கு அருகே நவம்பர் 24ம் தேதி வந்துள்ளனர். இவர்கள், 20 நாட்களே ஆன ஆண் குழந்தையை வைத்துகொண்டு காரில் காத்திருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்களை  கைது செய்தோம்” என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் “ கைது செய்யபட்டவர்களிடம் விசாரித்தபோது, மகாலட்சுமி என்பவர்தான் குழந்தையை, சமந்தப்பட்ட தம்பதியிடம் கொடுத்தால், பணம் தருவதாக கூறினார் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை கைது செய்து விசாரிக்க உள்ளோம். மேலும் இந்த 4 பேரும் குழந்தையை திருடினார்களா அல்லது வேறு நபரிடத்தில் இருந்து குழந்தையை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டார்களா என்பது தொடர்பாக விசாரிக்க உள்ளோம் “ என்று அவர் கூறினார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment