பிறந்து 20 நாட்கள் ஆன ஆண் குழந்தை: விற்க முயன்ற 4 பேர் கைது

பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்க முயற்சி செய்த, 3 பெண்கள் உள்பட 4 பேரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்க முயற்சி செய்த, 3 பெண்கள் உள்பட 4 பேரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
sade

பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்க முயற்சி செய்த, 3 பெண்கள் உள்பட 4 பேரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

கண்ணன் ராமசாமி( வயது 51), ஹேமலதா ( வயது 27), சரண்யா ( வயது 33) ஆகியோர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். முருகேஷ்வரி ( 22 வயது) மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்.  இவர்களை மத்திய குற்றப்பிரிவை சேர்ந்த சிறப்பு படை காவலர்கள் பெங்களூரில் கைது செய்துள்ளனர்.

இந்த சிறப்பு படைக்கு கிடைத்த ரகசிய தகவலை வைத்து, இந்த 4 பேரும் குழந்தையை, ஒரு தம்பதியிடம் விற்க முயற்சி செய்தபோது கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில் “ இந்த 4 பேரும், ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ராஜராஜேஸ்வரர் கோவிலுக்கு அருகே நவம்பர் 24ம் தேதி வந்துள்ளனர். இவர்கள், 20 நாட்களே ஆன ஆண் குழந்தையை வைத்துகொண்டு காரில் காத்திருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்களை  கைது செய்தோம்” என்று அவர் கூறினார்.

Advertisment
Advertisements

மேலும் அவர் கூறுகையில் “ கைது செய்யபட்டவர்களிடம் விசாரித்தபோது, மகாலட்சுமி என்பவர்தான் குழந்தையை, சமந்தப்பட்ட தம்பதியிடம் கொடுத்தால், பணம் தருவதாக கூறினார் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை கைது செய்து விசாரிக்க உள்ளோம். மேலும் இந்த 4 பேரும் குழந்தையை திருடினார்களா அல்லது வேறு நபரிடத்தில் இருந்து குழந்தையை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டார்களா என்பது தொடர்பாக விசாரிக்க உள்ளோம் “ என்று அவர் கூறினார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: