Advertisment

60 நாட்களில் சீரமைப்பு; ஜி-கார்னர் மேம்பாலம் மீண்டும் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு

ஐ.ஐ.டியில் இருந்து பேராசிரியர் அழகு சுந்தரம் தலைமையில் 4 பேர் கொண்ட குழு வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

author-image
WebDesk
New Update
Bridge.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியில் உள்ள RE பிளாக்குகளில் ஒரு பெரிய வீக்கம் காணப்பட்டது. இதனையடுத்து மண் சரிவுக்கு வாய்ப்பு இருப்பதால் உடனடியாக பொன்மலை ஜி-கார்னர் மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனையடுத்து தென் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மற்றொரு பாலத்தின் வழியாக இயக்கப்பட்டன.

Advertisment

நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலம் சீரமைக்கும் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. 60 நாட்களுக்கு பிறகு பணிகள் முடிவடைந்து மீண்டும், ஐ.ஐ.டியில் இருந்து பேராசிரியர் அழகு சுந்தரம் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினரால் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது வாகன போக்குவரத்தை தொடங்கலாமா? பாலத்தின் உறுதித் தன்மை அனைத்தையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த பின் மீண்டும் இந்த பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்தப் பாலத்தின் உறுதி தன்மையை சோதனை செய்ய பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு சென்சார் பொருத்தப்படுத்தப்பட்டது. இதுமட்டுமின்றி அந்த பாலத்தின் சேதமடைந்த மேல் பகுதியில் 30 டன் எடை கொண்ட லாரியை நிறுத்தி வைத்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் பாலப்பகுதி ஒரு மைக்ரோ மில்லி மீட்டர் அளவு கீழ் இறங்கினால் மீண்டும் சீரமைப்பு பணி தொடரும். ஆனால் இந்த ஆய்வின் முடிவில் பாலத்தின் உறுதித்தன்மை நிரூபிக்கப்பட்டதால் இன்று முதல் மீண்டும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி-கார்னர் மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. 

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி பழுது பார்க்கும் பணிக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து இன்று (மார்ச் 12) மீண்டும் 60 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மாநகர காவல் ஆணையர் ந.காமினி உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு போக்குவரத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். 

இந்த மேம்பால சீரமைப்பினால் கடந்த 60 நாட்களாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் பெருமூச்சு விடுவது வாகன ஓட்டிகள் மட்டுமல்ல, போக்குவரத்து காவலர்களும் தான் என்றால் அது மிகையல்ல. 

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment