மதுபோதையில் சப்ளையர் மீது அரிவாள் வெட்டு; தப்பியோடிய கும்பல்!

மதுரை மாநகர் வண்டியூர் பகுதியில் செயல்பட்டு வரும் சௌந்தர்யா உணவகத்தில் சப்ளையராக பணியாற்றும் கணபதி மீது, மதுபோதையில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் வண்டியூர் பகுதியில் செயல்பட்டு வரும் சௌந்தர்யா உணவகத்தில் சப்ளையராக பணியாற்றும் கணபதி மீது, மதுபோதையில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
attack

உணவகத்தில் சப்ளையரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாநகர் வண்டியூர் பகுதியில் செயல்பட்டு வரும் சௌந்தர்யா உணவகத்தில் சப்ளையராக பணியாற்றும் கணபதி மீது, மதுபோதையில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சம்பவத்தன்று அந்த கும்பல் உணவகத்தில் புரோட்டா கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது. கணபதி புரோட்டா தயாராகிக்கொண்டிருப்பதாக கூறியபோதும், கும்பல் உடனடியாக வேண்டும் என கடுமையாக வாதிட்டது. திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து கணபதியை சரமாரியாக வெட்டினர்.

பின்னர், கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஆயுதங்களை அங்கு வீசி விட்டு, கும்பல் தப்பியோடியது. படுகாயமடைந்த கணபதி ரத்தவெள்ளத்தில் கிடந்த நிலையில், அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உணவகத்தில் சப்ளையரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: