புதுக்கோட்டை நகராட்சியில் 23-ஆவது வார்டில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வீட்டில் கஞ்சா இருந்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டையில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீஸார் சோதனை செய்தபோது கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் மஜீத் என்பவரின் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்து 3 பிரிவுகளின் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “