Advertisment

கருடன் படம் பார்க்க குடும்பத்துடன் வந்த நரிக்குறவர்கள்: அனுமதிக்க மறுத்த தியேட்டர் நிர்வாகம்

கடலூரில் கருடன் படம் பார்க்க குடும்பத்துடன் சென்ற நரிக்குறவர்களுக்கு திரையரங்கில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Cuddalore Garudan

Cuddalore

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

துரை செந்தில் இயக்கத்தில் சூரி, சசிக்குமார் நடித்துள்ள `கருடன்' திரைப்படம் நேற்று (மே 31) திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தை பார்க்க கடலூர் நியூ சினிமா திரையரங்குக்கு, 20க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் குடும்பத்துடன் இன்று சென்றனர். ஆனால் உடையை காரணம் காட்டி, அவர்களை உள்ளே அனுமதிக்க திரையரங்க நிர்வாகத்தினர் மறுத்து விட்டனர்.

இதுதொடர்பாக கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நரிக்குறவர்கள், போலீசார் அறிவுறுத்தலின்படி கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.

இதையடுத்து வட்டாட்சியர் பலராமன் அவர்களை அரசு வாகனத்திலேயே படம் பார்க்க தியேட்டருக்கு அழைத்து வந்தார்.

இதையடுத்து போலீசார் மற்றும் கோட்டாட்சியரின் அறிவுறுத்தலின் படி, திரையரங்க நிர்வாகம், நரிக்குறவர்களை மதிய காட்சிக்கு திரைப்படம் பார்க்க அனுமதி வழங்கியது.

இந்த சம்பவத்தால் தியேட்டர் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment