சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று (மார்ச் 1) ரூ.5.50 காசுகள் உயர்ந்து ரூ.1965-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக குறைந்து இருந்த நிலையில் இன்று விலை அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.5.50 காசுகள் உயர்ந்து ரூ.1965 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு வணிக சிலிண்டரின் விலை தற்போது ரூ.1,965-ஆக அதிகரித்துள்ளது.