/indian-express-tamil/media/media_files/2025/04/01/IWqbN85nlGElkTjl24ZW.jpg)
கும்பகோணம் வெற்றிலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகக் கூடிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடு பெறப்படுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பொருட்களுக்கு சட்டப் பாதுகாப்பும் கிடைக்கிறது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைவருக்குமான உரிமையாக இந்த புவிசார் குறியீடு பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய உதாரணம் மதுரை மல்லி, காஞ்சீபுரம் பட்டு ஆகியவையாகும்.
ஒரு பொருட்களின் தனித்தன்மை, தயாரிக்கும் முறை, விளைவிக்கப்படும் செயல் முறை உள்ளிட்ட பல்வேறு விதமான தகவல்களை ஆவணங்களாக சேகரித்து மத்திய அரசிடம் விண்ணப்பித்து, அவர்களும் அதனை ஆராய்ந்து அதற்கான குறியீட்டை வழங்குவார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இதுவரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்து உள்ளது.
இந்த வரிசையில் தற்போது கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெறப்பட்டிருப்பதாக இன்று வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அறிவித்துள்ளார். முதல்முறையாக விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.