Advertisment

மோடி பங்கேற்கும் நிகழ்வில் த.மா.கா தொண்டர்கள் திரளாக கலந்து கொள்வர்: ஜி.கே.வாசன்

திருப்பூரில் பிரதமர் மோடி உரையாற்றும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஜி.கே.வாசன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

author-image
WebDesk
New Update
GK Vasan press.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப் பயணத்தின் நிறைவு விழா மற்றும் பொதுக் கூட்டம் இன்று (பிப்.27)  நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பாஜக தொண்டர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் உரையாற்றுகிறார். 

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். 

Advertisment

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த என்னை த.மா.க தொண்டர்கள் திரளாக வரவேற்றனர். பிரதமரின் பொதுக் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 

GK Vasan press1.jpg

வருங்கால இந்தியா உயர்ந்த இந்தியாவாக, மதிப்பிற்குரிய இந்தியாவாக, வளமான இந்தியாவாக பிரதமர் மோடி தலைமையில் அமையும் என தெரிவித்த அவர் அத்தகைய உயர்ந்த நிலைக்கு 10 வருட காலம் மத்திய மோடி அரசின் மக்கள் பணிகளும், மக்கள் திட்டங்களும் சாதனைகளுமே எடுத்துக் காட்டாக இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அமையும் என தெரிவித்தார். 

தமிழகத்திலிருந்து பாஜக கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கக்கூடிய உயர்ந்த நிலையை தமிழக வாக்காளர்கள் இந்த முறை ஏற்படுத்துவார்கள் என்று முழுமையாக நம்புகிறோம் எனவும் அதற்கேற்றவாறு எங்கள் களப்பணி அமையும் எனவும் தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment