/tamil-ie/media/media_files/uploads/2018/01/gnani.jpg)
Gnani Sankaran, Writer, Opinion, Kamala.Selvaraj
ஞாநி சங்கரன், தமிழகம் அறிந்த எழுத்தாளர், விமர்சகர், பத்திரிகையாளர்! 63 வயதான அவர், உடல் நலக்குறைவால் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார்.
ஞாநி சங்கரன், செங்கல்பட்டில் பிறந்தவர். இவரது இயற்பெயர் வே. சங்கரன். ஆங்கிலப் பத்திரிகையாளர் வேம்புசாமியின் மகன் ஆவார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞாநிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
ஞாநி சங்கரன், எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். கூர்மையாக அரசியல் விமர்சனங்களை வைக்கக்கூடியவர். ஆம் ஆத்மி சார்பில் தேர்தல் களத்திலும் நின்றார். ஞாநியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உடல்நலக் குறைவால் காலமான பிரபல எழுத்தாளர் திரு. ஞாநி சங்கரன் அவர்களுக்கு தமிழக பாஜக சார்பில் அஞ்சலியும், அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்திரிக்கை உலகிற்கு பேரிழப்பு. pic.twitter.com/GFJoratRLz
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) 15 January 2018
பிரபல எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான திரு ஞானி சங்கரன் காலமானார் என்ற செய்தியைக் கேட்டு வருத்தமுற்றேன். அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், நாடக கலைஞர், அரசியல்வாதி என பன்முகத் திறனுள்ளவர் அவர்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) 15 January 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.