/tamil-ie/media/media_files/uploads/2018/03/a402.jpg)
சிலைக் கடத்தல் தொடர்பான நீதிமன்றத்தின் 21 உத்தரவுகளை நிறைவேற்ற அரசுக்கு இறுதிக் கெடு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜஜி பொன் மாணிக்க வேல் தலைமையில் சிலைக் கடத்தல் சிறப்பு பிரிவை அமைத்து உத்தவிட்டது. மேலும் சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளை வழங்கி இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் வெள்ளியன்று (மார்ச் 9 ) முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தின் 21 உத்தரவுகளில் எந்தெந்த உத்தரவுகளை செயல்படுத் முடியும் என்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
அறிக்கையை பார்த்த நீதிபதி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேடை அலங்காரத்திற்காகக 1 கோடி ரூபாய் செலவு செய்யும் அரசு, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவிற்கு ஏன் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் அரசின் அரசின் ஒவ்வொரு செயல்படுகளையும் நீதிமன்ற உற்றுநோக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
இதுவரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு தெற்கு ரயில்வே அலுவலகத்தில் இயங்கி வருவதை சுட்டிக் காடிய நீதிபதி, 8 மாதங்கள் ஆகியும் நீதிமன்றம் ஒன்றை கூட அரசு அமல்படுத்தவில்லை என்றார். இந்நிலை தொடர்ந்தால், தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டி வரும் என்றும் தெரிவித்தார்.
இந்த 21 உத்தரவு அமல்படுத்துவது தொடர்பாக அரசு பதிலளிக்க இறுதி கெடு அளித்து வழக்கை மார்ச் 23 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும் சிலை வைப்பதற்கான பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை அறநிலையத் துறைக்கு ஐஜிபொண் மாணிக்க வேல் அளிக்க வேண்டும் என்றும் , மனுதாரர் யானை ராஜேந்திரனுக்கு காவல் துறை பாதுகாப்பு வழக்குவது தொடர்பாக காவல் துறை பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.