தங்கம் விலை உயர்வு எதிரொலி: அட்சய திருதியையிலும் விற்பனை மந்தம்; கோவை வியாபாரிகள் வேதனை

கோவை நகைக்கடைகளில் தங்கத்தின் விற்பனை மந்தமாக இருந்ததால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்க விலை உயர்வின் காரணமாக விற்பனை குறைந்ததாக கூறப்படுகிறது.

கோவை நகைக்கடைகளில் தங்கத்தின் விற்பனை மந்தமாக இருந்ததால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்க விலை உயர்வின் காரணமாக விற்பனை குறைந்ததாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cbe gold sales

கோவையில், இன்று அட்சய திருதியை முன்னிட்டு நடைபெற்ற தங்க நகைகள் விற்பனை மந்தமாக இருந்ததால், வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Advertisment

அட்சய திருதியை அன்று தங்க நகைகள் வாங்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள். அந்த வகையில் கடைக்காரர்களும் ஏராளமான தள்ளுபடி கொடுப்பார்கள்.

குறிப்பாக, கோவையில் அட்சய திருதியை முன்னிட்டு நகைக்கடையில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், இன்றைய தினம் நகைக்கடைகளில் எதிர்பார்த்த அளவு வியாபாரம் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, தங்கத்தின் விலை அதிகரிப்பால் பொதுமக்கள் யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், கடந்த 15 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள், இன்று தங்கம் வாங்கி சென்றனர்.

Advertisment
Advertisements

செய்தி - பி. ரஹ்மான்

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: