/indian-express-tamil/media/media_files/KLN0YAWZRyRTYBasLfAB.jpg)
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்திற்கு புதன்கிழமை (மே 29, 2024) சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் வந்திறங்கியது. அதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, பயணி ஒருவர் தனது தொடை பகுதியில் (knee cap) நீ கேப் போன்று அணிந்து அதில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. மேலும் அவரது உடமைகளில் துணிகளுக்கு நடுவில் தங்க சங்கிலி ஒன்றையும் மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பயணி எடுத்து வந்த மொத்த தங்கத்தின் மதிப்பு 1 கோடியே 3 லட்சத்து 13 ஆயிரத்து 257 ரூபாய் என்றும், அவர் கடத்தி வந்த தங்கத்தின் எடை 1 கிலோ 424 கிராம் எனவும் தெரிய வந்துள்ளது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.