மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இனி பெரிநாட்டில் நிற்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை-குருவாயூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், நாளை முதல் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பெரிநாடு ரயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு நிமிடம் நின்று செல்லும்.

மதுரை-குருவாயூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், நாளை முதல் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பெரிநாடு ரயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு நிமிடம் நின்று செல்லும்.

author-image
WebDesk
New Update
train

மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இனி பெரிநாட்டில் நிற்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை-குருவாயூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், நாளை (புதன்கிழமை) முதல் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பெரிநாடு ரயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

Advertisment

மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், நாளை (புதன்கிழமை) முதல் பெரிநாடு ரயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து குருவாயூருக்குச் செல்லும்போது, இந்த ரயில் காலை 11.18 மணியிலிருந்து ஒரு நிமிடம் பெரிநாட்டில் நின்று செல்லும். குருவாயூரில் இருந்து மதுரைக்குத் திரும்பும்போது, இந்த ரயில் மாலை 7.54 மணியிலிருந்து 1 நிமிடம் பெரிநாட்டில் நின்று செல்லும். இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Kerala Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: