தூத்துக்குடியிலிருந்து பெங்களூருவிற்கு யூரியா ஏற்றி சென்ற சரக்கு ரயில் இன்று (ஏப்ரல் 21) காலை தருமபுரி வழியாக பெங்களூருவிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த ரயிலின் 6 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கி தடம் புரண்டது.
இதனால் பெங்களூரு- சேலம் மார்க்கமாக செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வழியாக செல்லும் திருச்சி வழியாக செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், காரைக்கால், பெங்களூர் சிட்டி லோக்மான்யா திலக் உள்ளிட்ட ரயில்கள் திருப்பத்தூர் வழியாக மாற்றிவிடப்பட்டுள்ளது. தற்போது தடம்புரண்ட 6 பெட்டிகளையும் சரிசெய்யும் பணியில் ரயில்வே துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil