Advertisment

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 17 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai child abuse - 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

chennai child abuse - 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

சென்னை அயனாவரம் பகுதியில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கைதான 17 பேர் மீதும் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : 17 பேர் மீது குண்டர் சட்டம்:

கடந்த ஜூலை மாதம் சென்னை அயனாவரம் பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாராணையில், 17 பேர் சிக்கினர்.

மனநல குன்றிய 12 வயது சிறுமியை 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல் நலம் சரியில்லாத நிலையில் அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது இந்த குற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

12 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை : கைதான 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்!

பின்னர் போலீசிடம் புகார் அளித்து இது தொடர்பான விசாரணை நடத்தியபோது, ஒவ்வொருவராக பிடிப்படனர். இதில், அவர் வசிக்கும் குடியிருப்பின் வாட்ச் மேன் முதன் 17 வயது இளைஞர் வரை அனைவரும் சிக்கினர்.

இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது தமிழக காவல்துறை. மேலும், 17 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்கள் அனைவர் மீதும் இன்று குண்டர் சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு பதிவு, காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவில் பதிவாகியுள்ளது.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment